பழமொழிகளும் அதன் பொருள்களும்
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எதையும் அளவோடு அனுபவித்தல் வேண்டும்அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது - முக்கியமானவர் இன்றி எக்கருமமும் நடைபெறாதுஅடிநாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமிர்தமும் - உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் - விடாமுயற்சி வெற்றி அளிக்கும்அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உண்மை நட்புஅரைக்காசுக்கு அளிந்த கற்பு 1000 பொன் கொடுத்தாலும் வராது - கற்பின் பெருமைஆழமறியாது காலை விடாதே - எதையும் ஆராய்ந்து பார்த்து செய்தல் வேண்டும்ஆனைக்கும் அடி சறுக்கும் - பெரியவர்களுக்கும் தவறு ஏற்படலாம்ஆடத்தெரியாதவன் அரங்கு கோணலென்றானாம் - விடயத்தெளிவின்றி எதையும் குறை கூறாதேஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை - அற்பனுக்கு மதிப்புஆனைக்கொரு காலம் பூனை்கொரு காலம் - காலம் மாறலாம்ஆழ அமுக்கினாலும் நாழி முகவாகாது - கொள்ளக்கூடிய அளவே கொள்ளும்இளமையில் கல்வி சிலையில் எழுத்து - இளமையில் கற்பது என்றும் நிலைத்திருக்கும்இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை - திருப்தியற்ற மனம்இட்டுக்கெட்டார் எவருமில்லை - உதவி செய்து கெட்டுப்போனவர் எவருமில்லைஇளங்கன்று பயமறியாது - வாலிபத் துணிவுஇறைத்த கிணறே ஊறும். இறையாத கிணறே நாறும் - தருமத்தின் பெருமைபணம் பாதாளமட்டும் பாயும் - பணத்தின் வலிமைஉயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? - தகுதிக்கு மேலே எண்ணாதேஉறியில் நெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைவானேன் - வேண்டியதை தன்னிடம் வைத்துக்கொண்டு ஏனையோரிடம் வேண்டல்உடையவன் பாரா வேலை ஒருமுழம் கட்டை - உரியவன் இல்லாக் கருமம் குறைப்படல்ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் - பிறர் குழப்பத்தில் மகிழ்வடைதல்ஊசி போகுமிடம் பார்ப்பார் உலக்கை போகுமிடம் பாரார் - சிறிய விடயங்களில் கவனம் செலுத்துமளவு பெரிய விடயங்களில் கவனயீனமாக இருத்தல்எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு - வீண் பெருமைஎச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை எடுப்பானா? - உலோபித்தனம்எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? - ஈகையின் அவசியம்எய்தவன் இருக்க அம்பை நோவானேன் - தப்பபிப்பிராயம்ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் - ஏழ்மை கண்ணீரின் வலிமைஐந்து பணத்திற்கு குதிரையும் வேண்டும் ஆறு கடக்க பாயவும் வேண்டும் - பேராசைஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா - காலம் நில்லாதுஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமோ ? - கூட்டு முயற்சியின் முக்கியத்துவம்ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமையாக இருந்தால் எதனையும் சாதிக்கலாம்கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா ? - தகுதிக்கு மேலே எண்ணுதல்கடுகு சிறிதானாலும் காரம் பெரிது - சிறியதெனினும் சிறப்புண்டுகந்தையானாலும் கசக்கி கட்டு - தூய்மையாக இருத்தல் , வறுமையில் இருந்தாலும் செம்மையாக வாழ வேண்டும்கரும்பு தின்னக் கைக்கூலியா - காகம் திட்டி மாடு சாகாது - வீண்பழிக்கு அஞ்சேல்கிட்டாதாயின் வெட்டென மற- கிடைப்பதற்கு அரிதாக இருந்தால் உடனே மறந்து விடுவது நல்லதுகிணற்றுத்தவளைக்கு நாட்டு வளப்பமேன் - உலகை அறிகுற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் - மனசாட்சி உறுத்தல்கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை - பேராசைகெட்டாலும் செட்டி கிளிந்தாலும் பட்டு - புகழ் மங்காதுகெடுவான் கேடு நினைப்பான் - அழிவு அழிவை தரும்குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர் - வீண் பெருமைகுப்பையிலே கிடந்தாலும் குன்றுமணி மங்காது - நற்புகழ் மங்காதுபணம் பந்தியிலே குணம் குப்பையிலே - பண மதிப்புகைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? - தெளிவுகொல்லர் தெருவில் ஊசி விற்கலாமா? - இடமறியா மடமை
நல்லவை இன்னும் வேண்டும் என்பது இயல்பு.
பதிலளிநீக்குகளை பிடுங்காதாத பயிர் காற்பயிர்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு🧑🏫 ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் 50 இந்த பதிவில் பார்ப்போம். https://mindtopper.com/mottoes-about-the-teacher/
"ஒரு மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது, அதை அவனுக்குள் கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும்." – கலிலியோ கலிலி
பதிலளிநீக்கு"நாளை நீங்கள் இறப்பது போல் வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வது போல் கற்றுக்கொள்ளுங்கள்." – மகாத்மா காந்தி
"சாதாரண ஆசிரியர் கூறுகிறார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். உயர்ந்த ஆசிரியர் நிரூபிக்கிறார். சிறந்த ஆசிரியர் ஊக்கமளிக்கிறார்." – வில்லியம் ஆர்தர் வார்டு.
For more quotes, visit the full list here.